மாங்காட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

 

மாங்காட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

சென்னை மாங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர். கஞ்சா விற்பனை தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

மாங்காட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

இந்நிலையில், மாங்காடு தனியார் கல்லூரி அருகே சந்தேகத்திற்குரிய வகையில் இருசக்கர வாகனத்தில் நின்ற 2 இளைஞர்களை போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

மாங்காட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

அப்போது, அவர்கள் ஜனார்த்தனன்(36), மகேஷ் (25) என்பதும், இருவரும் சேர்ந்து மாங்காடு, குன்றத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மாங்காட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது