ஆண்டிப்பட்டி அருகே கஞ்சா விற்ற இருவர் கைது – 4 கிலோ கஞ்சா பறிமுதல்

 

ஆண்டிப்பட்டி அருகே கஞ்சா விற்ற இருவர் கைது – 4 கிலோ கஞ்சா பறிமுதல்

தேனி

ஆண்டிப்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த கடமலைக்குண்டு சுற்றுவட்டார பகுதிகளில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடமலைக்குண்டு காவல் நிலைய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடமலைக்குண்டு யானை கஜம் பகுதியில் நின்றிருந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேமடைந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பையில் சோதனையிட்டனர்.

ஆண்டிப்பட்டி அருகே கஞ்சா விற்ற இருவர் கைது – 4 கிலோ கஞ்சா பறிமுதல்

அப்போது, விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் ஆட்டுபாறை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (34) மற்றும் சுமையன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.