குன்றத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்

 

குன்றத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை

சென்னை குன்றத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். குன்றத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

குன்றத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்

அப்போது, திருமுடிவாக்கம் அடுத்த வழுதலம்பேடு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவருடமும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உடைகளுக்குள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

குன்றத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்

இதில் அவர்கள் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த லியோஜெபின்(26) மற்றும் ஆலந்தூரை சேர்ந்த சிவா(24), என்பது தெரியவந்தது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, குன்றத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் 2 மொபெட்டுகள் மற்றும் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.