இன்ஸ்டாகிராமில் பட்டா கத்தியுடன் பாட்டு பாடி, வீடியோ வெளியிட்ட இருவர் கைது!

 

இன்ஸ்டாகிராமில் பட்டா கத்தியுடன் பாட்டு பாடி, வீடியோ வெளியிட்ட இருவர் கைது!

திருப்பூர்

திருப்பூரில் பட்டாக் கத்தியுடன் பாடி இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் பீர் முகமது, ரகுமான் (எ) அப்பாஸ். இவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் கத்தி, பட்டா கத்தியுடன் பாட்டு பாடி, பொதுமக்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலான வீடியோவை பதிவிட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் பட்டா கத்தியுடன் பாட்டு பாடி, வீடியோ வெளியிட்ட இருவர் கைது!

இந்த வீடியோ வைரலானதால், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சிவராஜ், திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் தாராபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சரியாக கண்காணித்து வளர்க்க வேண்டும் என்றும், நல்ல அறிவுரைகளை கற்று தந்து, நல்வழி படுத்தினால் அவர்களது எதிர்காலம் நன்றாக இருக்கும் என போலீசார் கருத்து தெரிவித்து உள்ளனர்.