பிரபல நிறுவனம் பெயரில், போலி பல்பொடி விற்பனை – இருவர் கைது

 

பிரபல நிறுவனம் பெயரில், போலி பல்பொடி விற்பனை –  இருவர் கைது

நாமக்கல்

பரமத்தி வேலூரில் பிரபல நிறுவனத்தின் பேரில் போலியாக பல்பொடி தயாரித்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் திருவள்ளுவர் சாலை பகுதியில் செயல்பட்டு வரும் மளிகை கடைக்கு, நேற்று 2 நபர்கள் காரில் வந்தனர். அவர்கள் பிரபல பல்பொடி நிறுவனத்தில் இருந்து வருவதாக கூறி, தங்களிடம் இருந்த பல்பொடியை கொடுத்து, பணத்தைப்பெற்று சென்றனர்.

சிறிது நேரத்தில் அந்த கடைக்கு. குறிப்பிட்ட பல்பொடி நிறுவனத்தினர் டெலிவரி செய்ய வந்தபோது, தற்போது தான் இருவர் பல்பொடியை கொடுத்துவிட்டு செல்வதாக அவர் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அந்த பகுதியில் இருந்த மற்றொரு கடையில் விற்பனையில் ஈடுபட்ட இருவரையும் மடக்கிப்பிடித்தனர்.

பிரபல நிறுவனம் பெயரில், போலி பல்பொடி விற்பனை –  இருவர் கைது

தொடர்ந்து, இவருவரையும் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் பிரபல நிறுவனம் பெயரில் போலியாக பல்பொடி தயாரித்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போலி பல்பொடி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.