முடிவுக்கு வந்த மத்திய அரசு vs ட்விட்டர் மோதல்… இந்திய புகார் அதிகாரி நியமனம்!

 

முடிவுக்கு வந்த மத்திய அரசு vs ட்விட்டர் மோதல்… இந்திய புகார் அதிகாரி நியமனம்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்திலிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் அது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறி கணக்குகளை முடக்க ட்விட்டர் மறுத்தது. அப்போதிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இச்சூழலில் மத்திய அரசு புதிய சட்ட விதிகளைக் கொண்டுவந்தது.

முடிவுக்கு வந்த மத்திய அரசு vs ட்விட்டர் மோதல்… இந்திய புகார் அதிகாரி நியமனம்!

இந்த விதிகளுடன் உடன்பட மே 25ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ட்விட்டரை தவிர மற்ற சமூக வலைதள நிறுவனங்களும் அரசின் விதிகளுக்கு இணங்கின. ஆனால் ட்விட்டர் மட்டும் அரசுக்கு தண்ணி காட்டி வந்தது. மாறாக புதிய விதிகள் இந்தியர்களின் கருத்துரிமைக்கு எதிராக இருப்பதாக குற்றஞ்சாட்டியது. இது மத்திய அரசைக் கோபத்துக்குள்ளாக்கியது. ட்விட்டருக்கான சட்டப் பாதுகாப்பை அரசு விலக்கிக் கொண்டது. இதன்மூலம் ட்விட்டரில் யார் என்ன சர்ச்சை கருத்து கூறினாலும் அதற்கு ட்விட்டரே முழு முதற் பொறுப்பு. சட்ட ரீதியாக வழக்குகளைச் சந்திக்க வேண்டும் என்பதே அதற்கு அர்த்தம்.

முடிவுக்கு வந்த மத்திய அரசு vs ட்விட்டர் மோதல்… இந்திய புகார் அதிகாரி நியமனம்!

இதற்குப் பிறகு ஒரு கேஸில் ட்விட்டர் இந்தியாவின் மேலாண் இயக்குநர் மனிஷ் மகேஸ்வரி மீதே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மோதலின் உச்சமாக மூன்று நாட்களுக்கு முன் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கையே ட்விட்டர் முடக்கியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ட்விட்டரை சராமரியாக விமர்சித்திருந்தார் அவர். இச்சூழலில் மத்திய அரசின் புதிய விதிகளோடு உடன்படுவதற்கான முதல் அடியை ட்விட்டர் எடுத்து வைத்திருக்கிறது. ஆம் இந்தியாவுக்கான புகார் அதிகாரியை ட்விட்டர் நியமனம் செய்துள்ளது.

முடிவுக்கு வந்த மத்திய அரசு vs ட்விட்டர் மோதல்… இந்திய புகார் அதிகாரி நியமனம்!
மனிஷ் மகேஸ்வரி

அதன்படி ட்விட்டர் நிறுவனத்தின் உலகளாவிய சட்ட கொள்கை இயக்குநர் ஜெர்மி கெசல் என்பவர் இந்தியாவுக்கான புகார் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் முகவரியையும் வெளியிட்டிருக்கிறது. இந்த அதிகாரி புகாரை 24 மணி நேரத்துக்குள் ஏற்றுக்கொண்டு, அந்த புகார் மீது அடுத்த 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாரைப் பெற்றுக்கொண்டது தொடர்பாக புகார்தாரருக்கு ஒப்புகையும் வழங்கிட வேண்டும். இது மத்திய அரசின் புதிய ஐடி விதிகளில் ஒன்றாகும். அடுத்தடுத்து மத்திய அரசின் அனைத்து விதிகளுடனும் ட்விட்டர் உடன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.