‘எல்லா மாநில தலைநகரையும் அசால்ட்டாக சொல்லி’ இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த இரட்டை சகோதரர்கள்!

 

‘எல்லா மாநில தலைநகரையும் அசால்ட்டாக சொல்லி’ இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த இரட்டை சகோதரர்கள்!

அனைத்து மாநிலங்களின் தலைநகரையும் கூறி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்த சகோதரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுக்கள் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள கமுதியை சேர்ந்த தம்பதி ராமசாமி- பவானி. இவர்களுக்கு ஹரிஷித், ஹர்ஷித் ஆகிய இரட்டை பிள்ளைகள் இருக்கின்றனர். இரண்டு வயது மூன்று மாதங்களே ஆன இந்த சிறுவர்கள், அதிக நினைவாற்றலை கொண்டிருப்பதை உணர்ந்த பவானி, இவர்களுக்கு மாநிலங்களின் தலைநகர், சின்னம், திருக்குறள், தமிழ் மாதம் என பல்வேறு முக்கியமான விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதனை அப்படியே கற்றுக் கொண்ட சிறுவர்கள், அசால்ட்டாக எல்லாத்தையும் ஒப்பித்துள்ளனர்.

‘எல்லா மாநில தலைநகரையும் அசால்ட்டாக சொல்லி’ இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த இரட்டை சகோதரர்கள்!

அதுமட்டுமில்லாமல் இந்த சிறுவர்கள், தங்களின் நினைவாற்றலுக்காக ஹரியானா மாநிலத்தில் இருக்கும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். இதனை அறிந்த ராமநாதபுரம் ஆட்சியர், சிறுவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும், சிறுவர்களின் நினைவாற்றலை கண்டு வியந்ததாக ஆட்சியர் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

‘எல்லா மாநில தலைநகரையும் அசால்ட்டாக சொல்லி’ இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த இரட்டை சகோதரர்கள்!

இது குறித்து பேசிய சிறுவர்களின் தாய் பவானி, தான் அங்கன்வாடி பணியாளராக ஆக பணியாற்றி வருவதால் அந்த குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது போல இவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தேன் என்றும் அவர்கள் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றது பேரானந்தத்தை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இவர்களை போலவே அங்கன்வாடியில் இருக்கும் சிறுவர்களையும் சாதனை புத்தகத்தில் இடம் பெற வைக்க வேண்டும் என்பதே தனது ஆசை எனவும் பவானி கூறியுள்ளார்.