“எழுவர் விடுதலையில் ஆளுநரின் நயவஞ்சகமான கருத்துக்கள் கடும் கண்டனத்துக்குரியது” – வேல்முருகன்

 

“எழுவர் விடுதலையில் ஆளுநரின்  நயவஞ்சகமான கருத்துக்கள் கடும் கண்டனத்துக்குரியது” – வேல்முருகன்

எழுவர் விடுதலை தொடர்பான ஆளுநரின் கருத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிக்கக்கோரி பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிரைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருக்க, பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு இதுகுறித்து முடிவெடுக்க ஒருவார காலம் அவகாசம் வழங்கியது. ஆனால் 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு தான் உள்ளது என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“எழுவர் விடுதலையில் ஆளுநரின்  நயவஞ்சகமான கருத்துக்கள் கடும் கண்டனத்துக்குரியது” – வேல்முருகன்

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்னை விடுதலை செய்ய வலியுறுத்தி பேரறிவாளன் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஒரு வார காலத்தில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில் 7 தமிழரை விடுவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே இருப்பதாக உள்துறை அமைச்சகம் வாயிலாக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்து தமிழர்களின் நெஞ்சில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது.

“எழுவர் விடுதலையில் ஆளுநரின்  நயவஞ்சகமான கருத்துக்கள் கடும் கண்டனத்துக்குரியது” – வேல்முருகன்

எழுவர் விடுதலைக்கான நேரம் கனிந்து வருவதாக தமிழர்கள் நம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில்,அதில் மண்ணள்ளிப் போடும் ஆளுநரின் இதுபோன்ற நயவஞ்சகமான கருத்துக்கள் கடும் கண்டனத்துக்குரியது.
எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் மீது இருந்த குறைந்தபட்ச நம்பிக்கையும் தமிழர்கள் இழந்துவிட்டார்கள் ” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது மற்றொரு பதிவில், “எழுவர் விடுதலைக்கான நேரம் கனிந்து வருவதாக தமிழர்கள் நம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழக ஆளுநரின் இதுபோன்ற நயவஞ்சகமான கருத்துக்கள் கடும் கண்டனத்துக்குரியது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.