கிணற்றில் தவறி விழுந்து டிவி மெக்கானிக் பலி!
நெல்லை
நெல்லை அருகே கிணற்றி விழுந்த பந்தை எடுக்க முயன்ற டிவி மெக்கானிக் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் தாழையூத்து சிதம்பரநகரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் ராஜேந்திர பிரசாத்(40). டிவி மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் மாலை கங்கை கொண்டான் வெங்கடாஜலபுரம் பகுதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, பந்து அருகில் உள்ள கிணற்றில் விழுந்துள்ளது. அதனை எடுக்க முயற்சித்தபோது, எதிர்பாராத விதமாக ராஜேந்திர பிரிசாத் தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கினார்.
அவரை நண்பர்கள் மீட்க முயன்றும் முடியாவில்லை. இதனை அடுத்து, அவர்கள் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ராஜேந்திர பிரசாத் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தொடர்ந்து, கங்கைகொண்டான் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.