ஊரடங்கு எதிரொலி: வருமானம் இல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்த நடிகை

 

ஊரடங்கு எதிரொலி: வருமானம் இல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்த நடிகை

ஊரடங்கால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தொலைக்காட்சி நடிகை பிரெக்சா மேத்தா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இந்தி சின்னத்திரை நடிகை பிரெக்‌சா மேத்தா, மேரி துர்கா, லால் இஷ்க் உள்ளிட்ட இந்தி சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். 25 வயதான பிரெக்சா, பெண்களுக்கு குறைந்த விலையில் சானிடரி நாப்கினை தயாரித்துக் கொடுத்த, சிறந்த சமூக ஆர்வலரான கோவை அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பேட் மேன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

ஊரடங்கு எதிரொலி: வருமானம் இல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்த நடிகை

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் மும்பையில் தங்கியிருந்த பிரெக்சா, ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக அவரது சொந்த ஊரான இந்தூரில் தங்கி இருந்தார். படப்பிடிப்பு இல்லாததால் வருமானமின்றி மன அழுத்தத்தில் இருந்த அவர், தனது படுக்கை அறையில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு, ‘கனவுகள் மரணிப்பது மிக மோசமான விஷயம்’ என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரேக்சா பதிவிட்டிருக்கிறார். அத்துடன் ஒரு செல்பி புகைப்படத்தையும் பதிவிட்டு அதில் ஹிந்தி பாடல் வரிகளை பதிவிட்டுள்ளார். நடிகை பிரெக்சா தற்கொலை செய்ததற்கான நடிகை குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.