மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை – இருவர் கைது!

 

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை – இருவர் கைது!

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சமையல் தொழிலாளியை அடித்துக்கொன்ற, இருவர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்து மாரியப்பன். சமையல் தொழிலாளி. இவர் தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் உள்ள கடையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முத்து மாரியப்பன் கடையின் முன்பு உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த, மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் மத்திய பாகம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொலை சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை – இருவர் கைது!

இந்த நிலையில், கொலை தொடர்பாக முத்து மாரியப்பனின் நண்பர்களான டூவிபுரத்தை சேர்ந்த வேல்சாமி மற்றும் கணேசன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது, செவ்வாய் கிழமை இரவு மூவரும் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், முத்து மாரியப்பனை அவர்கள் அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதனை அடுத்து, இருவரையும் கைதுசெய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.