“இத்திட்டத்தை நிறைவேற்ற மனமில்லாமல் போனது ஏன்?” – டிடிவி தினகரன் கேள்வி!

 

“இத்திட்டத்தை நிறைவேற்ற மனமில்லாமல் போனது ஏன்?” – டிடிவி தினகரன் கேள்வி!

நாகூர் சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளத்தை அமைக்குமாறு மீனவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அரசு உடனே அதனை செய்து முடிக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

“இத்திட்டத்தை நிறைவேற்ற மனமில்லாமல் போனது ஏன்?” – டிடிவி தினகரன் கேள்வி!

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் கேட்டு போராடி வரும் மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதற்கான நடவடிக்கையைப் முதல்வர் பழனிசாமி உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீனவர்களின் நலனுக்காக சாமந்தான் பேட்டையில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் அம்மா அவர்களின் பெயரால் ஆட்சி நடத்துவதாக வார்த்தைக்கு வார்த்தை கூறும் இவர்களுக்கு, இத்திட்டத்தை நிறைவேற்ற மனமில்லாமல் போனது ஏன்? போராடும் மீனவர்களை அழைத்துப் பேசி தீர்வு காண முடியாமல் மீன்வளத்துறையின் அமைச்சர் அப்படி என்ன அதிமுக்கியமான வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்?

அம்மா அவர்களின் திட்டங்களை, கொள்கைகளை எல்லாம் புறக்கணிக்கிற பழனிசாமி அரசின் செயல்பாடுகளை அனைத்துத் தரப்பினரும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனிமேலும் தமிழக மக்களையும் அம்மாவின் உண்மைத்தொண்டர்களையும் இவர்களால் ஏமாற்ற முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.