“கொரோனா பேரிடரால் ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் விரைவில் அகன்று மகிழ்ச்சியான வாழ்வு சாத்தியமாகட்டும் ” : டிடிவி தினகரன் வாழ்த்து!
விநாயகர் சதுர்த்தி திருநாள் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஆனால் இம்முறை கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவில் பொது இடங்களில் சிலைகளை நிறுவவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ” வினைகளைத் தீர்த்து, வெற்றிகளைத் தந்திடும் விநாயகப்பெருமான் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தி தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வினைகளைத் தீர்த்து, வெற்றிகளைத் தந்திடும் விநாயகப்பெருமான் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தி தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 21, 2020
கொரோனா பேரிடரால் ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் விரைவில் அகன்று,உடல் ஆரோக்கியமும், பொருளாதார வளமும்,மகிழ்ச்சியான வாழ்வும் ஒவ்வொருவருக்கும் சாத்தியமாகட்டும். உலகெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்.அதற்கு முழு முதற்கடவுளான விநாயகரின் அருள் துணை நிற்கட்டும் என்று வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
கொரோனா பேரிடரால் ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் விரைவில் அகன்று,உடல் ஆரோக்கியமும், பொருளாதார வளமும்,மகிழ்ச்சியான வாழ்வும் ஒவ்வொருவருக்கும் சாத்தியமாகட்டும். உலகெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்.அதற்கு முழு முதற்கடவுளான விநாயகரின் அருள் துணை நிற்கட்டும் என்று வேண்டுகிறேன். pic.twitter.com/QCTVg8bBX0
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 21, 2020