“வீட்டுக்கு போற நேரத்துல இதெல்லாம் தேவையா எடப்பாடி?” – வெளுத்து வாங்கிய டிடிவி தினகரன்!

 

“வீட்டுக்கு போற நேரத்துல இதெல்லாம் தேவையா எடப்பாடி?” – வெளுத்து வாங்கிய டிடிவி தினகரன்!

சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் Grand Western Trunk Road என மாற்றப்பட்டிருந்தது. நெடுஞ்சாலைத் துறை இணையதளத்திலும் அவ்வாறே குறிப்பிட்டிருப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக தலைவர் ஸ்டாலின், திக தலைவர் கி.வீரமணி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் முதலமைச்சர் எடப்பாடியைக் கடுமையாகச் சாடினர். மேலும் பெயரை மாற்றுமாறும் வலியுறுத்தினர். தற்போது அண்ணா, காமராஜர் ஆகியோரின் பெயர்களிலிருந்து சாலைகளுக்கும் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“வீட்டுக்கு போற நேரத்துல இதெல்லாம் தேவையா எடப்பாடி?” – வெளுத்து வாங்கிய டிடிவி தினகரன்!

இதற்குக் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ள டிடிவி தினகரன், “சென்னை – பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்குச் சூட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரில் சென்னையில் அமைந்திருந்த நெடுஞ்சாலைகளின் பெயரையும் மாற்றி, தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சராகவும் இருக்கும் காபந்து அரசின் முதலமைச்சர் பழனிசாமி இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்? வீட்டுக்குப் போகப்போகிற நேரத்தில் எதற்காக இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்துகிறார்கள்? உடனடியாக இந்த உத்தரவுகளை திரும்பப் பெற்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரிலேயே அந்தந்த சாலைகள் தொடர்ந்து இருப்பதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.