700 தூய்மைப்பணியாளர்கள் பணிநீக்கம் – “பொங்கல் பண்டிகை நேரத்தில் மாநகராட்சி இப்படி செய்திருப்பது மனசாட்சியற்ற செயல்”

 

700 தூய்மைப்பணியாளர்கள்  பணிநீக்கம் – “பொங்கல் பண்டிகை நேரத்தில் மாநகராட்சி இப்படி செய்திருப்பது மனசாட்சியற்ற செயல்”

தூய்மைப்பணியாளர்கள் 700 பேரை சென்னை மாநகராட்சி திடீரென வேலையை விட்டு நீக்கி இருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

700 தூய்மைப்பணியாளர்கள்  பணிநீக்கம் – “பொங்கல் பண்டிகை நேரத்தில் மாநகராட்சி இப்படி செய்திருப்பது மனசாட்சியற்ற செயல்”

கொரோனா பேரிடர் காலத்தில் தன்னலம் பாராமல் பணியாற்றியவர்கள் முன்கள பணியாளர்கள். மருத்துவர்கள், செவிலியர்கள் வரிசையில் துப்புரவு பணியாளர்களும் தீவிரமாக பணியாற்றினர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சியில் பணிசெய்து வரும் துப்புரவு பணியாளர்கள் 700 பேரை வேலையை விட்டு விலக மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனால் துப்புரவு பணியாளர்கள் செய்வதறியாது சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல், முன்களப்பணியாளர்களாக நின்ற தூய்மைப்பணியாளர்கள் சுமார் 700 பேரை சென்னை மாநகராட்சி திடீரென வேலையை விட்டு நீக்கி இருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.

அதிலும் பொங்கல் பண்டிகை நேரத்தில் இப்படி மாநகராட்சி நிர்வாகம் செய்திருப்பது மனசாட்சியற்ற செயல். உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கிட வேண்டுமென சென்னை மாநகராட்சியை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.