தினகரன் மகளின் நிச்சயதார்த்தம்: சசிகலா தலைமையில் திருமணம் செய்ய திட்டம்!

 

தினகரன் மகளின் நிச்சயதார்த்தம்: சசிகலா தலைமையில் திருமணம் செய்ய திட்டம்!

டிடிவி தினகரன் மகளின் திருமண நிச்சயதார்த்தம் உறவினர்கள் மத்தியில் நேற்று நடந்து முடிந்தது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினருமான அவரது மகள் ஜெயஹரிணிக்கும், காங்கிரஸ் கட்சியின் தஞ்சை பிரமுகர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாதன் துளசி அய்யாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து பெண் பார்க்கும் சடங்கு, பூ முடித்தல் உள்ளிட்ட பாரம்பரிய சடங்குகள் சத்தமில்லாமல் எளிமையாக நடந்து முடிந்தது.

தினகரன் மகளின் நிச்சயதார்த்தம்: சசிகலா தலைமையில் திருமணம் செய்ய திட்டம்!

இந்நிலையில் ஜெயஹரிணிக்கும்,ராமநாதன் துளசி அய்யாவுக்கும் நேற்றிரவு கும்பகோணம் சுவாமிமலையில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் குறைந்த அளவு விருந்தினர்களுக்கே அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த விழாவில் தினகரன் தம்பி பாஸ்கரன், இளவரசி மருமகன் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினகரன் மகளின் நிச்சயதார்த்தம்: சசிகலா தலைமையில் திருமணம் செய்ய திட்டம்!

இருப்பினும் திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சசிகலா தலைமையில் திருமணம் செய்து வைக்க தினகரன் முடிவெடுத்துள்ளார். ஆனால் சசிகலா விடுதலையாகும் தேதி இன்னும் உறுதிபட தெரியாத நிலையில் திருமணம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.