வெளிப்படையான ஆட்சியை அமைப்பதற்கான கட்சிகளுடனே அமமுக கூட்டணி- டிடிவி தினகரன்

 

வெளிப்படையான ஆட்சியை அமைப்பதற்கான கட்சிகளுடனே அமமுக கூட்டணி- டிடிவி தினகரன்

போளூர் வேட்பாளரை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “அண்ணன் வருவார், விடியல் தருவார் என்பது திமுகவிற்கு மட்டும் தான். பிரியாணி, டீ கடை வைத்துள்ளவர்கள் திமுக வந்துவிடக்கூடாது என எண்ணுகின்றனர். நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம் திமுக. ஆனால், தற்போது நீட்டிற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். சில ஊடகங்கள் திமுக தான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என பொய்யாக கருத்துக்கணிப்பு நடத்திவருகின்றனர். மக்களின் வீடு, பட்டாவை திமுக மாற்றிவிடுவார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை கட்டாயமாக படிப்படியாக எடுத்துவிடுவோம்.

வெளிப்படையான ஆட்சியை அமைப்பதற்கான கட்சிகளுடனே அமமுக கூட்டணி- டிடிவி தினகரன்

அதிமுக கூட்டணி தமிழக துரோக கூட்டணி, தாய்மார்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்க முயன்று வருகின்றனர். மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அல்லது பாஜக யார் வந்தாலும் தமிழகத்தை மாற்றான் தாயாகதான் பார்க்கிறார்கள். திமுக, அதிமுக கதையை முடிக்க வேண்டிய கடமை மக்களாகிய உங்களின் கையில்தான் உள்ளது. எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாத வெளிப்படையான ஆட்சியை அமைப்பதற்கான கட்சிகளுடன் நாம் கூட்டணி அமைத்துள்ளோம்” என பேசினார்.