ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை… டிடிவி தினகரன் வேதனை!

 

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை… டிடிவி தினகரன் வேதனை!

கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவது வேதனையளிப்பதாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நிகழும் அவலங்கள் குறித்த டாக்டர் ஒருவரின் வீடியோ பதிவு வேதனை தருகிறது. கொரோனா பேரிடரின் துயரத்தை விட, அதற்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் மக்கள் அலைக்கழிக்கப்படுவது மிகுந்த மன வலியை ஏற்படுத்துகிறது.

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை… டிடிவி தினகரன் வேதனை!

‘ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை’என்ற எண்ணம் மக்களிடம் எழத்தொடங்கியுள்ளது. எனவே, அரசு மருத்துவமனைகளில் முறையான வசதிகள் இல்லாமலும், மின்வெட்டினால் வெண்டிலேட்டர் இயங்காமலும் நோயாளிகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக செய்திட வேண்டும். முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்திருக்கும் சூழலில், மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமலும் ஆக்சிஜன் கிடைக்காமலும் நோயாளிகள் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். சில இடங்களில் ஆம்புலன்ஸிலேயே காத்துக் கிடக்கும் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.