புயல் எச்சரிக்கை: அமமுகவினருக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்

 

புயல் எச்சரிக்கை: அமமுகவினருக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்

தமிழக மற்றும் புதுச்சேரிக்கு நிவர் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதையடுத்து அமமுகவினருக்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புயல் எச்சரிக்கை: அமமுகவினருக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தொடர்பான எச்சரிக்கை தொடர்ந்து வெளியாகி வரும் சூழலில், எப்போதும் போல மக்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்பதற்கான முன்னேற்பாடுகளை கழக உடன்பிறப்புகள் மேற்கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கஜா புயல் நேரத்தில் நம்முடைய கழக உடன்பிறப்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு, பகலாக இருந்து ஆற்றிய பணிகளை இப்போதும் டெல்டா பகுதி மக்கள் நினைவு கூர்கின்றனர். புயலுக்கு முன்பும், புயல் கரையைக் கடந்த பின்னும் மக்களுக்கு உதவும் பணிகளை கழகத்தினர் மிகுந்த கவனத்தோடும், பாதுகாப்போடும் மேற்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.