“புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ பிள்ளையார்சுழிபோட்டது திமுக தான்”

 

“புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ பிள்ளையார்சுழிபோட்டது திமுக தான்”

புதுச்சேரி மாநில அமமுக சார்பில் ஏஎப்டி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “புதுச்சேரியில் இதுவரை மாநில அந்தஸ்தைப் பெற்றுத்தருகின்ற விஷயத்தில் ஏற்கனவே ஆண்ட காங்கிரஸ் அரசாக இருக்கட்டும், மத்தியில் ஆளும் பாஜக அரசாகட்டும் இரண்டு கட்சிகளுமே மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பது தான் உண்மை. கடந்த 7 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பாஜக புதுச்சேரியின் மாநில அந்தஸ்தாக மாற்றுவதற்கு எந்தவொரு முயற்சியையும் இதுவரை எடுக்கவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த நாராயணசாமி, மத்தியில் பாஜக ஆட்சி இருப்பதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனக் கூறினார்.

“புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ பிள்ளையார்சுழிபோட்டது திமுக தான்”

காங்கிரஸ் கட்சிக்கு துணையாக இருக்கின்ற திமுகவும், பாஜகவுக்கு துணையாக இருக்கின்ற அதிமுகவும் அதுபற்றி வாய் திறப்பதே இல்லை. இவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்த முயற்சியில் அமமுக அரசு ஈடுபடும். வாய்ப்பளித்தால் புதுச்சேரியை மீட்டெடுப்போம். திமுக புதுச்சேரியில் நடத்திய நாடகத்தை 2 மாதங்களுக்கு முன் நீங்கள் பார்த்திருக்கலாம். வரும் தேர்தலில் 30 இடங்களிலும் திமுக போட்டியிட்டு வெற்றி பெரும். அதில் ஒரு இடம் குறைந்தாலும் இதே மேடையில் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஒருவரை பேசவைத்து, கூட்டணியை சிதைத்து, அதன் காரணமாக இங்கு இருந்த காங்கிரஸ் அரசு கவிழ பிள்ளையார் சுழிபோட்டது திமுக தான். இதன்மூலம் பாஜகவுக்கு துணைபோனது ஸ்டாலின். உண்மையான காங்கிரஸார் உங்களை மன்னிப்பார்களா?” என பேசினார்.