ஆர்.கே.நகர் மக்கள் அளித்த வெற்றியை போல் கோவில்பட்டி மக்களும் அளிக்க வேண்டும்- டிடிவி தினகரன்

 

ஆர்.கே.நகர் மக்கள் அளித்த வெற்றியை போல் கோவில்பட்டி மக்களும் அளிக்க வேண்டும்- டிடிவி தினகரன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி​தொகுதியில் மக்‍கள் வெள்ளத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார் டிடிவி தினகரன்.

இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பேசிய டிடிவி தினகரன், “பழனிசாமி ஆட்சி முடிவுக்‍கு வரும் நேரம் வந்துவிட்டதாகவும், தீயசக்‍தி தி.மு.க.வை ஆட்சிக்‍கட்டிலில் அமரவிடாமல் தடுக்‍க வேண்டும், கோவில்பட்டியில் வ.உ.சி.க்கு வெண்கலச்சிலை அமைக்கப்படும், திருமலை நாயக்கருக்கும் சிலை வைக்கப்படும். சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விவகாரத்தில் உரிய நீதி பெற்றுத்தரப்படும்.

ஆர்.கே.நகர் மக்கள் அளித்த வெற்றியை போல் கோவில்பட்டி மக்களும் அளிக்க வேண்டும்- டிடிவி தினகரன்

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல ஆண்டுகளாக இருந்த கடைகள் அகற்றப்பட்டு வியாபாரிகளுக்கு புதிய கடைகள் கட்டி தரப்படும், ஆர்.கே. நகர் மக்கள் அளித்த வெற்றியை போல் கோவில்ப்பட்டி மக்களும் அளிக்க வேண்டும்.அனைத்து கிராமங்களுக்கும் சுகாதாரமான குடிநீர் கிடைக்க கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்” என பேசினார்.