சசிகலாவுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு!

 

சசிகலாவுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறைக்கு சென்ற சசிகலா விடுதலைக்கு பின்னர் சென்னை வந்தார். பெங்களூரு விடுதியில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்த அவர், கடந்த வாரம் அங்கிருந்து புறப்பட்டு தமிழகம் வந்தார். சசிகலாவுக்கு எதிர்பார்க்காத அளவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரும் வழியெல்லாம் தொண்டர்கள் கோஷம் எழுப்பி மலர் தூவி மரியாதை செய்தனர். சென்னை வந்த சசிகலா, முதலில் ராமாபுரம் எம்.ஜி.ஆர் வீட்டுக்கு சென்றார்.

சசிகலாவுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு!

தொடர்ந்து சென்னை திநகரில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியாவின் இல்லத்திற்கு சென்ற சசிகலா, அங்கே தான் தற்போது தங்கியுள்ளார். இந்நிலையில் சசிகலாவை சந்திக்க அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கிருஷ்ணப்பிரியாவின் இல்லத்திற்கு வந்துள்ளார். அதிமுகவை மீட்டெடுப்பதே தங்களது முக்கியமான நோக்கம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், ஒற்றுமையுடன் செயல்பட்டு எதிர்க்கட்சிகளை வீழ்த்த வேண்டும் என சசிகலாவும் தெரிவித்துவருவது குறிப்பிடதக்கது.