“பன்முக ஆற்றலாளராக அரசியல் களத்தில் திகழ்ந்தவர் தா.பாண்டியன்” : தினகரன் புகழாரம்!

 

“பன்முக ஆற்றலாளராக அரசியல் களத்தில் திகழ்ந்தவர் தா.பாண்டியன்” : தினகரன் புகழாரம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“பன்முக ஆற்றலாளராக அரசியல் களத்தில் திகழ்ந்தவர் தா.பாண்டியன்” : தினகரன் புகழாரம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 89. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அதிலிருந்து குணமான நிலையில், நேற்றுமுன்தினம் சிறுநீரக தொற்று காரணமாக சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது.

இந்நிலையில் அமமுக தலைவர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமானபெரியவர் தா. பாண்டியன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்தவருத்தமுற்றேன்.

அவர், சிறந்த இடதுசாரி சிந்தனைவாதியாகவும், மக்களைஈர்த்த பேச்சாளராகவும், கருத்தாழமிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்த பன்முகஆற்றலாளர். அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும்,செயல்பட்டும் வந்தவர்.

கட்சிகளைத் தாண்டி புரட்சித்தலைவி அம்மா அவர்கள்மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தவர். தனிப்பட்ட முறையில் என்னோடுநட்புடனும் அன்புடனும் பழகியவர்.திரு. தா.பாண்டியன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்