“அதிகார மமதையில் ஆடுகிறார்கள்” தினகரன் சாடல்!

 

“அதிகார மமதையில் ஆடுகிறார்கள்”   தினகரன் சாடல்!

அதிகார மமதையால் அதிமுக அரசு என் மீது வழக்கு போடுகிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

“அதிகார மமதையில் ஆடுகிறார்கள்”   தினகரன் சாடல்!

தேவகோட்டை காரைக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியன் ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
“தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட திமுக முனைப்பு காட்டி வருகிறது. 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறிய திமுக, காவலர்களுக்கு ரூபாய் இரண்டாயிரம் கொடுத்து அவர்களை பணிநீக்கம் செய்ய காரணமாக மாறிவிட்டது. திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. ஆளும் கட்சி தலைமையிலான கூட்டணி பண பலத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கிறது” என்றார்.

“அதிகார மமதையில் ஆடுகிறார்கள்”   தினகரன் சாடல்!

“துரோகி என்று சொன்னதற்கு என் மீது வழக்கு தொடுத்துள்ளனர். பணம் படுத்தும் பாடு,பதவி படுத்தும் பாடு அதிகார மமதையால் அவர்கள் என்மீது வழக்கு பதிந்துள்ளனர். பழனிசாமி பச்சோந்தி பழனிசாமி ; அவர் பழனிசாமி இல்லை பொய் சாமி; ஆறு குளங்களை தூர்வாரினார்களோ இல்லையோ தமிழ்நாட்டு கஜானாவை காலி செய்து விட்டீர்கள். திமுக நம்பினால் தெருவில்தான் நிற்பார்கள்; தப்பித்தவறி ஸ்டாலின் முதல்வர் ஆனால் அவர் பொதுமக்களின் சொத்துக்களை தான் எடுத்து செலவு செய்வார். சிட்டுக்குருவியை பாதுகாக்க சொல்லும் பிரதமர் மோடியை முதலில் தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும்” என்றார்.