திமுக தீயசக்தி என்று ஸ்டாலினே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்- டிடிவி தினகரன்

 

திமுக தீயசக்தி என்று ஸ்டாலினே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்- டிடிவி தினகரன்

தென்காசியில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட டிடிவி தினகரன், “தமிழகத்தின் எந்தவொரு கெடுதலுக்கும் திமுக தான் காரணமாக இருந்துள்ளது. தொலைக்காட்சியில் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மோசடி வேலையை செய்கிறார்கள். சிலிண்டர் விலையை கட்டுப்படுத்தாமல் ஆண்டுக்கு 6 சிலிண்டர் கொடுப்பதாக தேர்தலுக்காக ஏமாற்றுகிறார்கள். தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இருக்கும்போது வாஷிங்மெஷின் கொடுப்பதால் என்ன பயன்? பழனிசாமி, பன்னீர்செல்வம் என எல்லாரும் சேர்ந்து தான் சின்னம்மா பொதுச்செயலாளராகணும்னு சொன்னார்கள். ஆனால் இப்போது ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.

திமுக தீயசக்தி என்று ஸ்டாலினே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்- டிடிவி தினகரன்

திமுக தீயசக்தி என்று ஸ்டாலினே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். முதியோர் உதவித் தொகையையே கொடுக்க முடியாதவர்கள் ரூ.1,000, ரூ.1,500 எப்படி தருவார்கள்? நாங்கள் நல்லவர் இல்லை என ஸ்டாலின் தானாகவே ஒத்துக்கொள்கிறார். மக்களை திசை திருப்ப திமுக வெற்றிபெறும் என மாயத்தோற்றத்தை உருவாக்கி ஏமாற்றப் பார்க்கிறார்கள். தமிழகம் முழுவதும் நமது வெற்றி சின்னமாக குக்கர் சின்னம் மாறிவிட்டது.தமிழகத்தில் துரோக ஆட்சியை முடிவுக்‍கு கொண்டு வர குக்‍கர் சின்னத்தில் வாக்‍களிக்‍க வேண்டும் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது மத்திய அரசுடன் கூட்டணி ஆட்சியில் இருந்தவர்கள் திமுகவினர். டெல்லி ஆட்சி முட்டுக்கொடுத்ததால் ஆளுங்கட்சியினர் 4 ஆண்டுகளாக ஆட்சியை நடத்தினர். சுனாமி அலை வீசுவதாக கூறும் திமுக, எதற்காக காவலர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள்? நேர்மையான, வெளிப்படையான ஆட்சி அமைய குக்கர் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கூறினார்.