கழிப்பறைக்கு சென்ற மாணவியை புகைப்படம் எடுத்த டிடிஆர்; ஓடும் ரயிலில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

 

கழிப்பறைக்கு சென்ற மாணவியை புகைப்படம் எடுத்த டிடிஆர்; ஓடும் ரயிலில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிப்பறைக்கு சென்ற மாணவியை டிடிஆர் புகைப்படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கோயம்புத்தூரில் படித்து வந்த நிலையில் தனது ஹாஸ்டலை காலி செய்வதற்காக கோயம்புத்தூர் சென்றுள்ளார். பின்னர் தனது தம்பியுடன் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்பி கொண்டிருந்துள்ளார். அந்த ரயில் சரியாக அதிகாலை 5 மணிக்கு அரண்கோணத்தை கடந்து சென்று கொண்டிருக்கையில், மாணவி கழிப்பறைக்கு சென்றுள்ளார்.

கழிப்பறைக்கு சென்ற மாணவியை புகைப்படம் எடுத்த டிடிஆர்; ஓடும் ரயிலில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

அச்சமயம் கழிவறைக்கு வெளியே இருந்த டிடிஆர், ஜன்னல் வழியாக அந்த மாணவியை புகைப்படம் எடுத்துள்ளார். இதனை பார்த்த மாணவி அதிர்ச்சி அடைந்து, டிடிஆருடன் வாக்குவாதத்தில் ஏற்பட்ட சத்தத்தால் பயணிகள் எல்லாரும் விழித்துக் கொண்டுள்ளனர். அதனையடுத்து டிடிஆரிடம் இருந்த செல்போனை பிடுங்கி பார்த்த பயணிகள், அந்த பெண்ணை கழிவறையில் வைத்து புகைப்படம் எடுத்ததை அறிந்து அவரை கடுமையாக பேசியுள்ளனர்.

கழிப்பறைக்கு சென்ற மாணவியை புகைப்படம் எடுத்த டிடிஆர்; ஓடும் ரயிலில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

இதனையடுத்து ரயில் பெரம்பூரில் நின்றதால், மாணவி பெரம்பூர் ரயில்நிலைய காவலர்களிடம் அளித்த புகாரை விசாரித்த அரக்கோணம் காவல்துறை ஆய்வாளர் விஜயலட்சுமி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்தார். மேலும், அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். இத்தகைய கொடூர புத்தியுடன் திரிந்த டிடிஆர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.