தாயை தவறாக பேசியதால், லாரி டிரைவர் கழுத்தறுத்து கொலை…!

 

தாயை தவறாக பேசியதால், லாரி டிரைவர் கழுத்தறுத்து கொலை…!

தூத்துக்குடி

மது அருந்தும் போது, தாயை தரக்குறைவாக பேசிய லாரி டிரைவரை, நண்பர்கள் இருவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள பெரிய நாயகிபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது38). அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் அஜித்(வயது21), காலான்கரையைச் சேர்ந்த ராஜமுந்திரி மகன் முனீஸ் (வயது23). மூவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

தாயை தவறாக பேசியதால், லாரி டிரைவர் கழுத்தறுத்து கொலை…!
கொலை சம்பவம்

லாரி டிரைவராக வேலை செய்து வரும் அவர்கள், நேற்றிரவு அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது அஜித்தின் தாயார் குறித்து முருகேசன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அஜித் மற்றும் முனீஸ் இருவரும் சேர்ந்து முருகேசனை சராமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், தலைப்பகுதி, காதுபகுதிகளை வெட்டியதுடன், கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இது குறித்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானராஜ் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி பழனிக்குமார் ஆகியோர் விசாரணையை துரிதப்படுத்தினர்.

தாயை தவறாக பேசியதால், லாரி டிரைவர் கழுத்தறுத்து கொலை…!
போலீசார் கைது

இந்த நிலையில், அஜித், முனீஸ் இருவரும் புதுக்கோட்டை போலிசில் சரணடைந்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து, அஜித்,முனீஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த படுகொலை சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.