ஆட்டோ மீது லாரி மோதி விபத்து – கட்டிட தொழிலாளி பலி

 

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து – கட்டிட தொழிலாளி பலி

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி அருகேயுள்ள புதூரை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி சத்தியராஜ். அதே பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஹேம்நாத். சத்தியராஜ், தனது நண்பரான ஹேம்நாத்திடம் ஆட்டோ ஓட்ட கற்றுக் கொடுக்கும்படி தெரிவித்து உள்ளார். இதனால், ஹேம்நாத் கிழம்பி – செவிலிமேடு புறவழிச் சாலையில் சத்தியராஜுக்கு ஆட்டோ ஓட்ட பயிற்சி அளித்துள்ளார்.

அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் தாறுமாறாக ஓடி, தடுப்பை கடந்து எதிர்புறம் சென்றது. அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று ஆட்டோ மீது அதிவேகமாக மோதியது. இதில், சத்தியராஜ் மற்றும் ஹேம்நாத் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலனஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து – கட்டிட தொழிலாளி பலி

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சத்தியராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஹேம்நாத்திற்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.