இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் பலி

 

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் பலி

மதுரை

மதுரையில் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் வெள்ளிமலை(30). இவர் வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். கோரிப்பாளையம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி ஓன்று, அதிவேகமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கிவீசப்பட்ட வெள்ளிமலை பலத்த காயமடைந்தார்.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் பலி

அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வெள்ளிமலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இந்த நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிப்பர் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.