தொப்பூர் கணவாய் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் – மூவர் பலி!

 

தொப்பூர் கணவாய் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் – மூவர் பலி!

தருமபுரி

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் இருசக்கர வாகனம் மீது, லாரி மோதிய விபத்தில் சேலத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் உள்ளிட்ட 7 பேர் நேற்று, தருமபுரி மாவட்டம் தொப்பூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்திவிட்டு, 4 இருசக்கர வாகனங்களில் சேலத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். தொப்பூர் கணவாய் பகுதியில் சென்றபோது, மத்திய பிரதேசத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு கோதுமை லோடு ஏற்றிச்சென்ற லாரி எதிர்பாராத விதமாக கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

தொப்பூர் கணவாய் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் – மூவர் பலி!

இந்த விபத்தில், ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ், சுவாமிநாதன், ஈஸ்வரன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஜகதீஸ்வரன், ஈஸ்வரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்த மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக தொப்பூர் கணவாய் பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.