இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து – கல்லூரி மாணவர் உயிரிழப்பு

 

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து – கல்லூரி மாணவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த இனாம் சமயபுரத்தை சேர்ந்த சபியுல்லா என்பவரது மகன் அப்துல் அஸ்லாம்(23). சபியுல்லா மனைவியுடன் வெளிநாட்டிற்கு சென்றுள்ளதால் அஸ்லாம் உறவினர் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறுதி தேர்வு நிறைவடைந்ததால், நேற்று சென்னையில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் சமயபுரத்துக்கு வந்தார்.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து – கல்லூரி மாணவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் வந்தபோது அஸ்லாமின் வாகனம் மீது, திருச்சியில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற லாரி அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அப்துல் அஸ்லாம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் செல்வராஜ் என்பவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.