பழனி அருகே அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து – மூவர் பலி!

 

பழனி அருகே அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து – மூவர் பலி!

திண்டுக்கல்

பழனி அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவுப் பேருந்து ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை செல்லப்பாண்டியன் என்பவர் ஓட்டிச்சென்றார். பழனி அருகேயுள்ள தாழையூத்து என்ற இடத்தில் சென்றபோது அரசுப்பேருந்தின் மீது எதிரே பழனி நோக்கி லாரி மோதிவிட்டு, சாலையில் கவிழ்ந்தது.

பழனி அருகே அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து – மூவர் பலி!

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்ட பிரபு, விருதுநகரை சேர்ந்த உக்கிரபாண்டி மற்றும் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், லாரி ஓட்டுநர் ரமேஷ் மற்றம் பேருந்து பயணிகள் என 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். தகவலின் பேரில் விபத்து பகுதிக்கு விரைந்து சென்ற சாமிநாதபுரம் காவல் நிலைய போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.