“ஆசையை தீர்த்த காதலன் ,ஆசிட் வீசிய காதலி” -பெண்ணை ஏமாற்றிய வாலிபரின் முகம் வெந்தது

 

“ஆசையை தீர்த்த காதலன் ,ஆசிட் வீசிய காதலி” -பெண்ணை ஏமாற்றிய வாலிபரின் முகம் வெந்தது


தன்னை காதலித்து ஏமாற்றிய காதலன் மீது ஒரு காதலி ஆசிட் வீசி பழிவாங்கிய சம்பவம் பல வாலிபர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஆசையை தீர்த்த காதலன் ,ஆசிட் வீசிய காதலி” -பெண்ணை ஏமாற்றிய வாலிபரின் முகம் வெந்தது


திரிபுரா மாநிலம் அகர்தலாவில் பினாட்டா சந்தல் என்ற 27 வயது பெண்ணை அதே ஊரை சேர்ந்த 30 வயது வாலிபர் பள்ளி பருவத்திலிருந்து காதலித்து வந்துள்ளார் .கிட்டத்தட்ட எட்டு ஆண்டுக்கலுக்கும் மேலாக அவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள் .இந்நிலையில் அந்த வாலிபர் திடீரென அந்த பெண்ணை விட்டு விலக தொடங்கினார் .
இதனால் சந்தல் அந்த வாலிபருக்கு பலமுறை மெசேஜ் அனுப்பியும் ,போன் செய்தும் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை .அதனால் அந்த பெண் அவரை சந்திக்க அவர் வேலை செய்யும் பகுதிக்கு சென்ற போது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது .ஆம் அங்கு அவர் வேறொரு பெண்னோடு காதலித்து சுற்றி வந்துள்ளார் .இதை கண்டு பொறுக்காத அந்த சந்தல் இது பற்றி அவரிடம் கேட்ட போது அவர் அதற்கு சரியாக பதில் சொல்லாமல் போய் விட்டார் .
இதனால் மனம் வெந்த அந்த பெண், அங்குள்ள ஒரு கடையில் ஆசிட் வாங்கினார் .பிறகு அந்த வாலிபர் வரும் வழியில் நின்று கொண்டார் .அப்போது அவர் வந்தபோது அவரின் முகத்தில் அந்த ஆசிடை வீசிவிட்டு சென்று விட்டார் .இதனால் முகம் வெந்து ஆபத்தான நிலையில் துடித்துகொண்டிருந்தவரை , அங்குள்ள பொது மக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள் ,அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“ஆசையை தீர்த்த காதலன் ,ஆசிட் வீசிய காதலி” -பெண்ணை ஏமாற்றிய வாலிபரின் முகம் வெந்தது