“அரசு வேலைன்னு வந்து ,பணத்தை இழந்து …”ஆன்லைனில் வந்த விளம்பரத்தால் பலர் பாதிப்பு

 

“அரசு வேலைன்னு வந்து ,பணத்தை இழந்து …”ஆன்லைனில் வந்த விளம்பரத்தால் பலர் பாதிப்பு

அரசு பொதுப்பணி துறையில் வேலை கொடுப்பதாக ஏமாற்றி பல பட்டதாரி வாலிபர்களிடம் பல லட்சம் மோசடி செய்த கூட்டத்தை போலீசார் கைது செய்தார்கள் .

“அரசு வேலைன்னு வந்து ,பணத்தை இழந்து …”ஆன்லைனில் வந்த விளம்பரத்தால் பலர் பாதிப்பு

டெல்லியில் அமித் குமார் (27), ராம்தயால் லால் (28), குர்தீப் (28)ஆகிய மூவரும் சேர்ந்து இணையத்தளத்தில் ஒரு விளம்பரம் கொடுத்தனர் .அதன் படி பொதுப்பணி துறையில் அரசு வேலைக்கு நேர்முக தேர்வு நடப்பதாக அந்த விளம்பரம் அவர்களால் கொடுக்கப்பட்டது .அந்த விளம்பரத்தை பார்த்து ஏமாந்த பல பட்டதாரி வாலிபர்கள் அவர்கள் சொன்ன விலாசத்துக்கு சென்ற மாதம் குவிந்தனர் .அப்போது அவர்கள் வேலை தேடி வந்த வாலிபர்களிடம் டெபாசிட் தொகை கட்ட வேண்டுமென்று கூறி பணம் வசூலித்தனர் .அவர்களின் பேச்சை நம்பி அரசாங்க வேலை கிடைக்கும் என்ற ஆசையில் பல வாலிபர்கள் பணம் கட்டினார்கள் .அவர்களிடமிருந்தது கிட்டத்தட்ட 12லட்ச ரூபாய் பணத்தை வசூலித்து விட்டு அவர்கள் அந்த இடத்தை விட்டு இரவோடு இரவாக காலி செய்து விட்டு ஓடி விட்டனர் .
பிறகு பாதிக்கப்பட்ட வாலிபர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் முக்கிய குற்றவாளியான அமித் குமாரை பிடித்து விசாரித்தனர் .அப்போது அவர்களை பற்றி பல திடுக்கிடும் உண்மை வெளியானது .அவர்கள் இதே போல் பல இடங்களில் பல மாநிலங்களில் அரசாங்க வேலை கொடுப்பதாக கூறி அரசாங்க முத்திரையை தவறாக பயன்படுத்தி இணையத்தில் விளம்பரம் கொடுத்து பல வாலிபர்களை மோசடி செய்துள்ளதை கண்டறிந்தார்கள் .அதனால் போலீசார் அமித் குமார் மற்றும் அவரின் கூட்டாளிகளை கைது செய்தார்கள் .

“அரசு வேலைன்னு வந்து ,பணத்தை இழந்து …”ஆன்லைனில் வந்த விளம்பரத்தால் பலர் பாதிப்பு