பா.ஜ.க. செய்ததை அப்படியே காப்பி அடிக்கும் மம்தா கட்சி.. பர்தமானில் பேரணி நடத்திய திரிணாமுல் காங்கிரஸ்

 

பா.ஜ.க. செய்ததை அப்படியே காப்பி அடிக்கும் மம்தா கட்சி.. பர்தமானில் பேரணி நடத்திய திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் பா.ஜ.க. நடத்திய அதே பகுதியில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் பேரணி நடத்தியது.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கடந்த சனிக்கிழமையன்று ஒரு நாள் சுற்றுப்பயணமாக மேற்கு வங்கம் சென்று இருந்தார். அப்போது பர்தமான் மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பெரிய பேரணியில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். இதனையடுத்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தனது வலிமை காட்டும் நோக்கில் பா.ஜ.க. நடத்திய அதே பகுதியில் ஒரு பேரணியை நேற்று நடத்தியது.

பா.ஜ.க. செய்ததை அப்படியே காப்பி அடிக்கும் மம்தா கட்சி.. பர்தமானில் பேரணி நடத்திய திரிணாமுல் காங்கிரஸ்
திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸ் பேரணியில் கலந்து கொண்ட அந்த கட்சியின் இளைஞர் பிரிவு துணை தலைவர் சோஹம் சக்ரவர்த்தி பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க.வினர் வெளியாட்கள் என்பதால் அவர்களுக்கு வங்கத்தின் கலாச்சாரம் மற்றும் மொழி தெரியாது. இங்கு அவர்களால் அரசு அமைக்க முடியாது. மக்களின் தன்னிச்சையான தன்மை மம்தா பானர்ஜி 3வது முறையாக ஆட்சிக்கு வர வாக்களிக்கப்படுவார் என்பதைக் காட்டுகிறது.

பா.ஜ.க. செய்ததை அப்படியே காப்பி அடிக்கும் மம்தா கட்சி.. பர்தமானில் பேரணி நடத்திய திரிணாமுல் காங்கிரஸ்
சோஹம் சக்ரவர்த்தி

வங்கத்தில் அவர்களால் (பா.ஜ.க.) எதுவும் செய்ய முடியாது என்று ஜே.பி. நட்டாவுக்கு நான் சவால் விடுகிறேன். பா.ஜ.க.வினர் மக்களை பலவந்தப்படுத்தி தங்களது பேரணியில் மக்களை கலந்து கொள்ள முயற்சி செய்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஜே.பி. நட்டா நேற்று முன்தினம் பா.ஜ.க. பேரணியில் பேசுகையில், மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. வெல்லும் என்பதற்கான அறிகுறியை மக்களின் உற்சாகம் தருவதாக குறிப்பிடத்தக்கது.