மாந்தோப்புக்கு போன மாணவர்கள் -மாட்டு சாணத்தை சாப்பிட்டார்கள் -என்ன காரணம் தெரியுமா ?

 

மாந்தோப்புக்கு போன மாணவர்கள் -மாட்டு சாணத்தை சாப்பிட்டார்கள் -என்ன காரணம் தெரியுமா ?


இரண்டு டீனேஜ் சிறுவர்களை , மாம்பழம் திருடிய குற்றத்திற்காக மாட்டு சாணத்தை சாப்பிட வைத்த கொடுமை நடந்துள்ளது .

மாந்தோப்புக்கு போன மாணவர்கள் -மாட்டு சாணத்தை சாப்பிட்டார்கள் -என்ன காரணம் தெரியுமா ?


தெலுங்கானாவின் மகாபூபாபாத் மாவட்டத்தில் உள்ள காந்தைபாலம் கிராமத்தில் வசிக்கும் 15 வயதான மற்றும் 17 வயதான இரண்டு மாணவர்கள் அங்குள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் ,பதினோராம் வகுப்பில் படிக்கிறார்கள் .இப்போது பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு மாந்தோப்புக்குள் சென்றார்கள் .அப்போது அங்கிருந்த மாம்பழங்களை திருடி சாப்பிட போனார்கள் .
இதை அந்த தோப்பின் சொந்தக்காரரர்களும் ,அங்கிருந்த காவலாளியும் பார்த்து விட்டார்கள் .பின்னர் அவர்கள் அந்த டீனேஜ் வாலிபர்களை பிடித்து அந்த தோப்பில் கட்டி வைத்தார்கள் .
பிறகு கட்டி வைக்கப்பட்ட அந்த சிறுவர்களுக்கு ஒரு தட்டில் மாட்டு சாணத்தை கொடுத்து சாப்பிட சொன்னார்கள் .அதன் பிறகு அவர்களின் உடல் முழுவதும் மாட்டு சாணத்தை பூசி விட்டு அவர்களை அதையும் சாப்பிட சொன்னார்கள் .அந்த சிறுவர்களும் வேறு வழியின்றி பயந்து போய் அந்த மாட்டு சாணத்தை சாப்பிட்டார்கள் .இதை அந்த சிறுவர்களில் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார் .பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்டதும் ,அவர்கள் வெளியே வந்து இந்த காட்சியுள்ள வீடியோவை சமுக ஊடகத்தில் வெளியிட்டனர் .மேலும் அவரின் பெற்றோர்களிடமும் இது பற்றி கூறினார்கள் .இதனால் கொந்தளித்த அவர்களின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிந்து தோப்பின் சொந்தக்காரர்கள் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .

மாந்தோப்புக்கு போன மாணவர்கள் -மாட்டு சாணத்தை சாப்பிட்டார்கள் -என்ன காரணம் தெரியுமா ?