திருச்சி- விஜயகாந்த் நலம்பெற வேண்டி தேமுதிகவினர் வழிபாடு
Oct 17, 2020, 10:46 IST1602911794000
திருச்சி
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பூரண உடல் நலத்துடன் வாழ வேண்டி,
திருச்சி மாவட்டம் பெரியக்காண்டியம்மன் கோவிலில், தேமுதிகவினர் சிறப்பு பூஜை மேற்கொண்டனர். திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது.