காதல் தோல்வியால் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை!

 

காதல் தோல்வியால் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை!

திருச்சி

திருச்சியில் காதல் தோல்வியால் ஆயுதப்படை பெண் காவலர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொணடார்

சேலம் மாவட்டம் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கவுசல்யா. கடந்த 2017ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக தேர்வான இவர், திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கவுசல்யா உடன் பணிபுரிந்த காவலரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, கவுசல்யாவின் வீட்டிற்கு பெண் கேட்டு காவலர் சென்றுள்ளார்.

காதல் தோல்வியால் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை!

மாப்பிள்ளை மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், திருமணத்திற்கு கவுசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த காவலர் சில மாதங்களுக்கு முன்பு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். காதல் தோல்வியால் மனமுடைந்த கவுசல்யா நேற்று தனது அறையில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

மயங்கிய நிலையில் கிடந்த அவரை சக காவலர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுசல்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்