திருச்சி ஶ்ரீசிவசுப்ரமணிய சுவாமி ஆலய ஆருத்ரா தரிசன விழா- திரளான பக்தர்கள் வழிபாடு

 

திருச்சி ஶ்ரீசிவசுப்ரமணிய சுவாமி ஆலய ஆருத்ரா தரிசன விழா- திரளான பக்தர்கள் வழிபாடு

திருச்சி

திருச்சி நகரில் பழமைவாய்ந்த ஶ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடந்த நடராஜர் வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். சிவ பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமாகும். சிறப்பான மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவ ஆலயங்களில் நடைபெறும் ஆரூத்ரா தரிசனம் பன்மடங்கு பலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும் வழிபாடாக உள்ளது.

திருச்சி ஶ்ரீசிவசுப்ரமணிய சுவாமி ஆலய ஆருத்ரா தரிசன விழா- திரளான பக்தர்கள் வழிபாடு


இதனையொட்டி, திருச்சி மாநகர் மேலப்புலிவார்ட் சாலையில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் இன்று காலை நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி அம்பாள் மற்றும் பரிகார மூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா சென்றார். தொடர்ந்து, நடராஜர் அஜபா நடன வைபவமும், பின்னர் நடராஜருக்கு மகா தீபாராதனையும் நடந்தது. ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நடராஜரை வழியெங்கும் திரளான பக்தர்கள் விரதமிருந்து வழிபட்டுச் சென்றனர். இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக பிரசித்திபெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் மற்றும் நடராஜர் புறப்பாடு ரத்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.