திருச்சி- சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கியது – கூட்டமில்லாத முன்பதிவு மையங்கள்

 

திருச்சி- சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கியது – கூட்டமில்லாத முன்பதிவு மையங்கள்

திருச்சி

தமிழகத்தில் இயக்கப்படவுள்ள 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி- சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கியது – கூட்டமில்லாத முன்பதிவு மையங்கள்


திருச்சியில் ஒரு சில பயணிகள் மட்டுமே நேரில் வந்து முன்பதிவு செய்ததால் முன்பதிவு மையம் வெறிசோடி காணப்பட்டது.

திருச்சி- சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கியது – கூட்டமில்லாத முன்பதிவு மையங்கள்


சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
பயணிகள் வரிசையாக நின்று சமூக இடைவேளையுடன் டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்,முன்பதிவு செய்ய வரும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்படவில்லை.

திருச்சி- சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கியது – கூட்டமில்லாத முன்பதிவு மையங்கள்


தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் 50 சதவீத ரயில்கள் திருச்சி ரயில்வே ஜங்சனுக்கு வந்து செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை – கோவை இடையே 3 சேவைகளும், சென்னை – திருச்சி மற்றும் கோவை – மயிலாடுதுறை இடையிலும் ரயில்கள் இயக்கம் செய்யப்படுகிறது.

திருச்சி- சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கியது – கூட்டமில்லாத முன்பதிவு மையங்கள்

மொத்தம் 13 ரயில்கள் இயக்கப்படவுள்ள நிலையில், பயணிகள் பயண நேரத்திற்கு 90 நிமிடங்கள் முன்னதாக ரயில் நிலையம் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 மாதங்களுக்கு பிறகு ரயில் சேவை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.