திருச்சியில் ஆர்.பி.எப். உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி!

 

திருச்சியில் ஆர்.பி.எப். உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி!

திருச்சி

திருச்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள நாகப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (59). இவர் நாகையில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று, திருச்சிக்கு மாறுதல் செய்யப்பட்டார். இதனையடுத்து, குடும்பத்துடன் திருச்சிக்கு வந்த நிலையில், ஆய்வாளராக பதவியேற்பதற்கு முன்பாக அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.

திருச்சியில் ஆர்.பி.எப். உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி!

இதனால், மோகன் பொன்மலையில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மோகன், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரது உடல் திருச்சி ஓயாமாரி சுடுகாட்டில், போலீசாரின் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. ஆய்வாளராக பதிவியேற்க இருந்த நிலையில், வைரஸ் தொற்றால் மோகன் உயிரிழந்தது அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.