சங்கிலி தொடராய் சாத்தான் குளம் சம்பவம் -திருச்சியில் முதியவர் மீது போலீஸ் தாக்கு -வைரல் வீடியோவால் மீண்டும் பரபரப்பு ..

 

சங்கிலி தொடராய் சாத்தான் குளம் சம்பவம் -திருச்சியில் முதியவர் மீது போலீஸ் தாக்கு -வைரல் வீடியோவால் மீண்டும் பரபரப்பு ..

திருச்சியில் மீண்டும் சாத்தான்குளம் சம்பவம் போல ,போலீசாரால் ஒரு முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது . திருச்சியில் உள்ள எம்ஜிஆர் ரவுண்டானா அருகே இந்த சம்பவம் திங்கள்கிழமை நடந்தது.
திருச்சி மாவட்டம் பேரையூர் காவல்நிலையத்தில் பணிபுரியும் இளங்கோ என்ற தலைமை காவலர் திங்களன்று காலையில் எம்ஜிஆர் ரவுண்டானா அருகே ஒரு முதியவருடன் கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிறகு அவரை கடுமையாக தாக்கினார் .இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது
45 விநாடிகள் கொண்ட அந்த வைரலாகும் வீடியோவில், இளங்கோ என்ற அந்த போலீஸ், சைக்கிளில் செல்லும் ஒரு முதியவரோடு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ,பிறகு அவரை கடுமையாக தாக்கும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது .

சங்கிலி தொடராய் சாத்தான் குளம் சம்பவம் -திருச்சியில் முதியவர் மீது போலீஸ் தாக்கு -வைரல் வீடியோவால் மீண்டும் பரபரப்பு ..பின்னர், தலைமை காவலர் இளங்கோ தனது இரு சக்கர வாகனத்தில் அந்த இடத்தை விட்டு வெளியேறினார். இந்த சம்பவத்தின் வீடியோ அருகிலுள்ள கட்டிடத்தில் உள்ள கேமெராவில் பதிவாகியுள்ளது .சமூக ஊடகத்தில் வைரலான இந்த வீடியோவால் , வோரையூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் அந்த போலீஸ்காரர் இப்போது ஆயுத ரிசர்வ் போலீஸ் படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.பொது மக்கள் மீது தொடரும் இது போல போலீசாரின் தாக்குதல் சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .சாத்தான்குளம் சம்பவத்தின் விசாரணை தொடங்கிய நிலையில் இதுபோல ஒரு சம்பவம் மீண்டும் நடந்திருப்பது கொரானா காலத்தில் மக்களிடையே புது வித அச்சத்தினை உருவாக்கியுள்ளது .