திருச்சி- பெரியார் சிலைக்கு செருப்பு மாலை- குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியல்

 

திருச்சி- பெரியார் சிலைக்கு செருப்பு மாலை- குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே பெரியார் சிலைக்கு செருப்பு மாலையிட்டு காவி வண்ணம் பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி- பெரியார் சிலைக்கு செருப்பு மாலை- குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியல்

அங்குள்ள இனாம்குளத்தூர் ஊராட்சி பகுதியில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. அங்குள்ள நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றியும், செருப்பு மாலை போட்டும் சென்றுள்ளனர்.”

திருச்சி- பெரியார் சிலைக்கு செருப்பு மாலை- குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியல்

அதிகாலையில், இதனை அறிந்த அப்பகுதி மக்கள், அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல் துறையினர் சிலையினை சுத்தம் செய்து உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி- பெரியார் சிலைக்கு செருப்பு மாலை- குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியல்


இந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்களும் தி.க, திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி- பெரியார் சிலைக்கு செருப்பு மாலை- குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியல்


போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ஜெய்ராம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் நேரில் விசாரணை செய்து வருகின்றனர். அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.