டெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது

 

டெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது

திருச்சி

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு செல்ல முயன்ற விவசாய சங்க தலைவர் அய்யக்கண்ணு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைதுசெய்தனர்.

டெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்று, ஆதரவு தெரிவிப்பதற்காக திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் நிலையம் வந்தனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அனைவரையும் கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.

டெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது

இதானல் ஆத்திரமடைந்த விவசாயிகள், மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் ரயில் நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, அகில இந்திய விவசாய சங்க ஒருங்கிணைப்புகுழுவைச் சேர்ந்த தன்னை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தூண்டுதலால் போலீசார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தார். முன்னதாக, கடந்தவாரம் டெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணுவை, போலீசார் வீட்டுக்காவலில் வைத்த நிலையில், தற்போது அவரை கைதுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.