திருச்சி- 144 தடையை மீறியதாக எம்எல்ஏ கருணாஸ் மீது வழக்குப்பதிவு
திருச்சி
கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டத்தை கூட்டியதாக எம்.எல்.ஏ கருணாஸ் உள்ளிட்ட 75 பேர் மீது திருச்சி காந்தி மார்க்கெட் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சி தாரநல்லூர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் புகைப்படம் தாங்கிய
பெயர் பலகை, மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து
நேற்று தாராநல்லூர் பகுதிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் எம்எல்ஏ கருணாஸ்,
சேதப்படுத்தப்பட்ட முத்துராமலிங்க தேவர் பேனரை, நேரில் பார்வையிட்டு, பின் அங்குள்ள பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில், திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் கருணாஸ் உள்ளிட்ட 75 பேர் மீது 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் சமூக இடைவெளி இன்றி கூட்டத்தை கூட்டியது, வைரஸ் தொற்று பரவ உடந்தையாக இருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.