மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த ஒருவர் கைது; தனிப்படை அதிரடி

 

மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த ஒருவர் கைது; தனிப்படை அதிரடி

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் முறைகேடாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்துவந்த நபரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர், புலிவலம், பகளவாடி ஆகிய பகுதிகளில் முறைகேடாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை

மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த ஒருவர் கைது; தனிப்படை அதிரடி

செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், அந்த பகுதிகளில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெரமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே மது விற்பனை செய்த ஓமாந்தூரை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரை கைதுசெய்த தனிப்படையினர், அவரிடமிருந்து 180 பாட்டில்கள், செல்போன்,

மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த ஒருவர் கைது; தனிப்படை அதிரடி

ஆயிரத்து 820 ரொக்கப்பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதான ஆனந்தகுமாரை புலிவலம் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்த அவர்கள், மதுவிற்பனையில் தொடர்புடைய சரவணன், வடிவேல் உள்ளிட்ட மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.