திருச்சி- அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் 5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை- மர்ம நபர்கள் கை வரிசை

 

திருச்சி- அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் 5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை- மர்ம நபர்கள் கை வரிசை

திருச்சி

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பிக்சாண்டார் கோயில் ஊராட்சி, வெங்கடேஷ்வரா நகரில் வசிப்பவர் தமிழரசு. இவர் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில், லால்குடி கிளையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சென்னை சிஎம்டிஏவில் பணிபுரிவதால், தனது பிள்ளைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

திருச்சி- அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் 5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை- மர்ம நபர்கள் கை வரிசை

இந்த நிலையில் தமிழரசு கடந்த 25 ந்தேதி சென்னையில், மனைவி பிள்ளைகளை பார்க்கச் சென்றுவிட்டு, நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்படிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 15 பவுன் தங்க

திருச்சி- அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் 5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை- மர்ம நபர்கள் கை வரிசை

நகைகள், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 1/2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்கமாக சுவர்ஏறி குதித்து, வீட்டின் கதவினை உடைத்துள்ளதாக தெரிய வந்தது.

திருச்சி- அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் 5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை- மர்ம நபர்கள் கை வரிசை


அதிர்ச்சியடைந்த தமிழரசு, இது தொடர்பாக கொள்ளிடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.