பிரதமர் மோடிக்கு காகித ராக்கெட் விட்டு விவசாயிகள் நூதன போராட்டம்

 

பிரதமர் மோடிக்கு காகித ராக்கெட் விட்டு விவசாயிகள் நூதன போராட்டம்

திருச்சி

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, திருச்சியில் விவசாயிகள் ராக்கெட் விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பிரதமர் மோடிக்கு காகித ராக்கெட் விட்டு விவசாயிகள் நூதன போராட்டம்

இந்த நிலையில், இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் 200-க்கும் மேற்பட்ட விசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கோரிக்கைகள் அடங்கிய நோட்டீசை ராக்கெட்டாக செய்து காற்றில் பறக்க விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.