திருச்சி மாநகர தி.மு.க செயலாளர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி!
Jul 13, 2020, 20:09 IST1594651158000
தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,328பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது.
சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பாராபட்சமின்றி கொரோனா பரவி வரும் இந்த நிலையில், திருச்சி மாநகர தி.மு.க செயலாளரும் முன்னாள் துணை மேயருமான மு.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.