திருச்சி மாவட்டத்தில் தற்போது வரை 10 சதவீதம் வாக்குப்பதிவு!

 

திருச்சி மாவட்டத்தில் தற்போது வரை 10 சதவீதம் வாக்குப்பதிவு!

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில், தற்போது வரை மாவட்டத்தில் 10 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்து 292 வாக்குச் சாவடிகளில், அதிகாலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன், நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் தற்போது வரை 10 சதவீதம் வாக்குப்பதிவு!

மேலும், மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், தேர்தல் துவங்கியது முதலே முதியோர்கள் அதிகளவில் வாக்குச் சாவடிகளுக்கு வந்திருந்தனர். இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் சற்று முன்பு வரை 9.99 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.